வெள்ளி, 4 மார்ச், 2016

தட்டைப்பாதங்கள் தரும் வேதனை

 தட்டைப்பாதங்கள் தரும் வேதனை


முன்னுரை


      பாதங்களில் என்ன வேதனை இருக்கப் போகிறது என நீங்கள்   நினைக்கலாம்  .அதிலும் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது.
மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதுஉடல் வலிமைஉள்ளவர்களை சேர்த்துக் கொள்ளும் ராணுவம் கூட 
தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறதுஏன்?

பிறந்த குழந்தைக்கு இருக்கும் தட்டைப்பாதம்

     பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள்அதன்   வடிவம் தட்டையாகத்தான்  இருக்கும்குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம்நீடிக்கும் வயதுக்குள் 95 சதவீதக்   குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும்நம் அனைவரின் பாதங்களும் ஒரே மாதிரியான  அமைப்பில் இருப்பதில்லைபல வடிவங்களில்பல   அளவுகளில் காணப்படும்.சொல்லப்போனால் ஒருவரின் வலது   பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூடஓரளவு   வித்தியாசம் இருக்கிறது

நெகிழ்ந்து கொடுக்கும் தட்டைப்பாதம்

    சிலருக்கு நிற்கும் போது உடலின் எடை பாதத்தில் விழுவதால்   பாதம் சற்றுதட்டையாகத் தோன்றும்அவர்களே உட்கார்ந்தாலோபடுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதிசமத்தாக உட்புறம் வளைந்து   சாதரணமாக மாறிவிடும்இது நெகிழ்ந்து கொடுக்கும்தன்மையுள்ள தட்டைப் பாதம்பாதத்தின் இயல்பான வடிவத்தை காக்கும்   தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.   தட்டையான பாதம்கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில்   பிரச்சனை இருக்காதுஅவசரமாக ஓடிப்போய் ஏறிக் கொள்வதில்  கூட சிரமம் இருக்காதுஆனால்நீண்ட நேரம் நின்று கொண்ட வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும்தவிர   ஓட்டப்பந்தய வீரராக வருவதுகடினம்  இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை

இறுகிய தட்டைப்பாதம்

      தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது  குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைஅதுபோலவே  லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டுசரியானலும் கவலைப்படத்  தேவையில்லைஆனால்மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டுஅதை  இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள்இவர்களுக்கு பின்  பாதத்துக்கும்நடுப்பாதத்துக்கும்இடையே உள்ள எலும்புகள்  பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும்அங்கு நெகிழ்வுத் தன்மைக் குறைந்து அதன்  காரணமாகவும் தட்டைப்பாதம்உண்டாகலாம்.

முடிவுரை

     தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால்  அதற்கென்று இருக்கும்காலணிகளை அணிந்து கொள்ளலாம்அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின்வெளிப்புறமும்உட்புறமும் அசைவைக் குறைக்கும் வகையில் சிகிச்சை செய்வதேநல்லதுஇதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்ததுஅப்போதுதான் பாதம்முழுவளர்ச்சி அடைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக