ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே



                      பழமொழி

                            முன்றுறையரையனார்

கல்லா   தவரிடைக்   கட்டுரையின்  மிக்கதோர்

பொல்லாத   தில்லை   ஒருவற்குநல்லாய்!

இழுக்கத்தின்   மிக்க   இழிவில்லை;   இல்லை,

ஒழுக்கத்தின்   மிக்க   உயர்வு. (பாடல் எண் - 57)

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு என்பது பழமொழி. ஒழுக்கத்தின் சிறப்பினால் வரும் உயர்வைவிட சிறந்த உயர்வு ஒருவர்க்கு எதுவுமில்லை. இழுக்கத்தை விட மிகவும் இழிவானது ஒன்றுமில்லை. ஒழுக்கத்தை விட மிகவும் உயர்வானது இவ்வுலகில் எதுவுமில்லை. ஆதலால் கல்லாதவர் முன்பு கட்டுரையைப் படித்துக் காட்டுவதைப் போல ஒரு இழிவான செயல் இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக